Paristamil Navigation Paristamil advert login

சிவப்பு வண்ணத்தில் மாறிய இலைகள்! காரணம் என்ன?

சிவப்பு வண்ணத்தில் மாறிய இலைகள்! காரணம் என்ன?

9 கார்த்திகை 2019 சனி 02:15 | பார்வைகள் : 9466


சீனாவில் தற்போது இலையுதிர்க்காலம் துவங்கியுள்ள நிலையில், மலைப்பகுதிகளிலுள்ள மர இலைகள் சிவப்பு வண்ணத்தில் மாறி ரம்யமாக காட்சியளிக்கின்றன.
 
வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணம் மற்றும் மஞ்சள் நதி ஓடும் கிழக்குச் சீனாவின் ஷாண்டாங் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் வண்ணங்களை வாரித்தெளித்தது போல் காட்சியளிக்கும் மலைகளை பொதுமக்கள் கண்டு களிக்கின்றனர்.
 
அதே போல் பிங்க்லு கவுண்டி பகுதியில் மஞ்சள் வண்ணத்தில் பழுத்துக் குலுங்கும் பெர்சிமோன் பழங்களும், காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில் காட்சியளிக்கின்றன.
 
இந்தப் பகுதியில் சுமார் ஆயிரத்து 300 ஆண்டுகளாக பெர்சிமோன் பழங்கள் விளைவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்