இராணுவத்திற்கு வேவு பார்க்க உதவும் கடல் உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

9 ஆனி 2019 ஞாயிறு 07:45 | பார்வைகள் : 6170
அமெரிக்கத் தற்காப்பு ஆய்வு நிறுவனம், ராணுவத்தின் வேவுத் திறனை மேம்படுத்த கடல் உயிரினங்களின் உதவியை நாடியுள்ளது.
பெரிய மீன்கள் முதல், ஓர் உயிரணு கொண்ட உயிரினங்கள் வரை அந்த முயற்சியில் ஈடுபடுத்தப்படும்.
கடலடியிலிருந்து சமிக்ஞை எழுப்பி எச்சரிக்கை விடுக்க அவை பயன்படுத்தப்படும்
கடலடி வாகனங்கள் குறித்த விவரங்களை அத்தகைய உயிரினங்கள் எவ்வாறு வழங்குகின்றன என்பதை புதிய முயற்சி ஆராயும்.
கடலடியில் வாகனங்களின் நடமாட்டத்தை உணரும்போது, அந்த உயிரினங்கள் வெவ்வேறு வகையில் செயல்படும்.
அச்சுறுத்தலை உணரும் சில உயிரினங்கள், அவற்றின் உடலிலிருந்து ஒளியை வெளியிடும்.