Paristamil Navigation Paristamil advert login

அம்மா.. மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க!

அம்மா.. மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க!

28 ஐப்பசி 2019 திங்கள் 11:47 | பார்வைகள் : 9273


மனைவி தன கணவனை வீட்டில் விட்டுவிட்டு வெளி ஊர் சென்றிருந்தாள் . போகும்போது அவனிடம் தன செல்லப் பூனையை ஒப்படைத்து, நன்றாக கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டாள் இரண்டு நாட்கள் கழித்து போனில் பூனையை பற்றி விசாரித்தாள் .
 
 
"இன்னிக்கு காலையில உன் பூனை செத்துப் போச்சு ." என்றான் கணவன்.
 
அழுது புலம்பிய மனைவி " எப்படி நீங்க இவ்ளோ பெரிய சோகத்தை சாதாரணமா சொல்லலாம். இன்னிக்கு "பூனை மொட்டை மாடியிலே விளையாடுது ன்னு சொல்லி இருக்கணும் ". நாளைக்கு நான் போன் பண்ணும்போது " கால் தவறி பூனை மாடியிலேருந்து விழுந்துடுச்சு" ன்னு சொல்லணும் . அதுக்கு அடுத்த நாள் " அடி பலமா பட்டதாலே பூனை செத்து போச்சுன்னு சொல்லணும் " . அப்போ தான் என்னாலே தாங்கிக்க முடியும் இப்படி போட்டு உடைச்சுட்டீங்களே ?"
 
" சரி எங்க அம்மா எப்படி இருக்காங்க "?
 
" மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க "

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்