Paristamil Navigation Paristamil advert login

நரேந்திர மோடி விடயத்தில் தப்பாகிப் போன இலங்கை அரசின் கணக்கு!

நரேந்திர மோடி விடயத்தில் தப்பாகிப் போன இலங்கை அரசின் கணக்கு!

23 ஆனி 2014 திங்கள் 19:56 | பார்வைகள் : 9244


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த வாரம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை பூட்டானுக்கு மேற்கொண்டிருந்தார்.

நரேந்திர மோடியை முதலாவதாக தமது நாட்டுக்கே வரவழைக்கப் பல நாடுகள் போட்டி போட்டன.

அவர் இலங்கைக்கே முதலில் பயணம் மேற்கொள்வார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின.

பின்னர், அவர் ஜப்பானுக்குச் செல்லப் போவதாக தகவல்கள் கசிந்தன.

கொழும்பு ஊட­கங்­களும், ஜப்­பா­னிய ஊட­கங்­களும், நரேந்­திர மோடியின் முதல் வெளி­நாட்டுப் பயணம் தமது நாட்­டுக்கே என்று செய்­தி­களையும் வெளியிட்டன. ஆனால், அவர் தனது முதல் வெளி­நாட்டுப் பய­ணத்தை பூட்­டா­னுக்கு மேற்­கொண்­டி­ருந்தார்.

நரேந்­திர மோடி­யுடன் நெருக்­க­மான உறவை ஏற்­ப­டுத்திக் கொள்­ளவும் அவரை முதல் முத­லாக கொழும்­புக்கு வர­வ­ழைக்­கவும், இலங்கை அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்­டது உண்மை.

ஆனால், அவர் தனது முத­லா­வது வெளி­நாட்டுப் பய­ணத்தை இலங்­கைக்கு மேற்­கொள்­ளா­த­தை­யிட்டு இலங்கை அர­சாங்கம் வருத்தம் கொண்­டி­ருக்கும் என்று கருத முடி­யாது.

ஏனென்றால், நரேந்­திர மோடியின் பத­வி­யேற்பு நிகழ்­வுக்கு சென்­றி­ருந்த, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம், 13ஆவது திருத்­தச்­சட்டம் தொடர்­பாக அவர் வெளி­யிட்ட சில இறுக்­க­மான நிலைப்­பா­டுகள், இலங்கை அர­சாங்­கத்­துக்கு மகிழ்ச்­சியைக் கொடுத்­தி­ருக்­க­வில்லை.

13வது திருத்­தச்­சட்­டத்தை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்றும், இந்­தி­யா­வுக்குக் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும் என்றும் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி தனது முத­லா­வது சந்­திப்­பி­லேயே எடுத்துக் கூறி­யி­ருந்தார்.

இத்­த­கைய பின்­ன­ணியில், நரேந்­திர மோடி தனது முத­லா­வது பய­ணத்தை, கொழும்­புக்கு மேற்­கொண்டால், அது­பற்றி மேலும் வலி­யு­றுத்­துவார் என்­ப­தையும், அது­பற்­றிய புதிய வாக்­கு­று­தி­களை எதிர்­பார்ப்பார் அல்­லது ஒரு காலக்­கெ­டுவைக் கொடுக்­கலாம் என்றும் கொழும்பு எதிர்­பார்த்­தி­ருக்கும்.

எனவே, நரேந்­திர மோடி தனது முத­லா­வது வெளி­நாட்டுப் பய­ணத்தை, இலங்­கைக்கு மேற்­கொள்­ளா­த­தை­யிட்டு கொழும்பு அதிகம் கவ­லைப்­பட்­டி­ருக்க வாய்ப்­பில்லை.

ஆனாலும், அவ­ருடன் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான ஒரு வாய்ப்பு பின்­தள்­ளப்­ப­டு­வ­தை­யிட்டு கொழும்பு சற்று கிலே­ச­ம­டைந்­தி­ருக்­கலாம்.

இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளுக்கு தமது முதல் பய­ணத்தை மேற்­கொள்­ளாமல், இமா­லய நாடான பூட்­டா­னுக்கு எதற்­காக தமது முதல் பய­ணத்தைத் தெரிவு செய்தார் என்­பது முக்­கி­ய­மான விவ­காரம்.

இலங்கைக்கோ, பாகிஸ்­தா­னுக்கோ அவர் தமது முத­லா­வது வெளி­நாட்டுப் பய­ணத்தைத் தெரிவு செய்­தி­ருந்தால், அந்த இரண்டு நாடு­க­ளுமே, தம்மை அதிக முக்கியத்துவத்துடன் இந்தியா பார்க்கிறது என்று கரு­தி­விடக் கூடிய சூழல் இருந்­தது.

பாகிஸ்­தா­னுடன், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி உறவை ஏற்­ப­டுத்திக் கொள்ள விரும்­பி­னாலும், இரு­நா­டு­க­ளுக்கும் இடையே ஏகப்­பட்ட பிரச்­சி­னைகள், கருத்து முரண்­பா­டுகள் உள்­ளன.

அதை­விட, இந்­தியா தனக்கு இணை­யான நாடாக பாகிஸ்­தானை ஒரு போதும் கரு­தி­ய­தில்லை.

ஆனால், வளர்ந்து வரும் சீன ஆதிக்­கத்­தை­யிட்டுத் தான் இந்­தியா அதிக கரி­சனை கொண்­டுள்­ளது.

அதே­வேளை, பாகிஸ்தான் மூலம் இந்­தி­யா­வுக்கு ஏற்­று­ம­தி­யாகும் தீவி­ர­வாதம் குறித்து இந்­தியா அதிக கரி­சனை கொண்­டுள்­ளது என்­பதை மறுக்க முடி­யாது.

இந்­தியா தனக்குச் சவா­லாக கருதும், சீனாவும் பாகிஸ்­தானும் நெருக்­க­மாகி வரு­வதை விரும்­ப­வில்லை.

முன்னர் அமெ­ரிக்­காவின் நிழலில் இருந்த பாகிஸ்தான் இப்­போது கணி­ச­மாக சீனாவின் சிற­குக்குள் வந்து விட்­டது.

இத்­த­கைய பின்­ன­ணியில், பாகிஸ்­தா­னுக்கு முன்­னு­ரிமை கொடுத்­தி­ருந்தால், சீனா­வுடன் இணைந்து கொண்டு அந்த நாடு இந்­தி­யா­வுக்கு தண்ணி காட்டத் தொடங்­கி­விடும்.

அது­போ­லவே, சீனாவின் செல்­லப்­பிள்­ளை­யாக இருக்கும் இலங்­கைக்கும், முக்­கி­யத்­துவம் கொடுக்க நரேந்­திர மோடி விரும்­ப­வில்லை.

ஏற்­க­னவே, சீனா­வுடன் கொண்­டுள்ள நெருக்­கத்தை தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு, இந்­தி­யா­வுக்கு போக்குக் காட்டிக் கொண்­டி­ருக்­கி­றது கொழும்பு.

இந்­தியா கைவிட்டால் இருக்­கவே இருக்­கி­றது சீனா என்ற வகையில், இலங்கை செயற்­படத் தொடங்கி நெடுங்­கா­ல­மாகி விட்­டது.

இந்தப் பின்­பு­லத்தில், நரேந்­திர மோடி முத­லா­வ­தாக கொழும்­புக்கு வந்­தி­ருந்தால், இலங்கை அரசின் தலைக்­கனம் இன்னும் அதி­க­ரித்­தி­ருக்கும்.

இலங்­கைக்கு, இந்­தியா அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கி­றது என்று கருதி, தனது பேரம் பேசலை ஆரம்­பித்­தி­ருக்கும். இதனை இந்­தியா சரி­யா­கவே கணக்குப் போட்­டது.

அதனால் தான், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, முதல் வெளி­நாட்டுப் பய­ணத்தை எந்த நாட்­டுக்கு மேற்­கொள்­ளலாம் என்று சவுத் புளொக்கில் ஆலோ­சனை நடத்­தப்­பட்ட போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் குறித்துப் பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வே­யில்லை.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியை புது­டில்­லியில், சந்­தித்துப் பேச்சு நடத்­திய பின்னர், கொழும்பு திரும்­பிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜக் ஷ முதல் வேலை­யாக சம்பூர் அனல் மின் திட்­டத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களைத் துரி­தப்­ப­டுத்­து­மாறு உத்­த­ர­விட்­டி­ருந்தார் என்­பது நினை­வி­ருக்­கலாம்.

அது இந்­தி­யாவை குறிப்­பாக நரேந்­திர மோடியை குளிர்­விக்க மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­யாக கரு­தப்­ப­டு­கி­றது.

தற்­போ­தைய நிலையில், சம்பூர் அனல்மின் நிலைய கட்­டு­மானப் பணிகள் வரும் ஒக்­டோபர் மாத­ம­ளவில், ஆரம்­பிக்­கப்­படும் என்று தெரி­கி­றது.

வரும் ஒக்­டோபர் மாதம், மாத்­த­ளையில் இந்­தி­யாவின் 450 மில்­லியன் ரூபா நிதி­யு­த­வி­யுடன் கட்­டப்­பட்டு வரும் காந்தி மண்­டபத் திறப்பு விழா­வுக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியை அழைக்கும் திட்­டத்தில் கொழும்பு இருக்­கி­றது.

ஒரு­வேளை, அவர் கொழும்பு வரும் போது, அதே­நாளில் சம்பூர் அனல் மின் நிலை­யக கட்­டு­மானப் பணி­களை ஆரம்­பிக்கும் விழா­வையும் கூட நடத்த அர­சாங்கம் முயற்­சிக்­கலாம்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியை அந்த நிகழ்­வுக்கு வர இணங்க வைக்க வேண்­டி­யது முக்­கி­ய­மா­ன­தொரு சிக்கல்.

ஏனென்றால், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி அடுத்த சில மாதங்­க­ளுக்கு தொடர் வெளி­நாட்டுப் பய­ணங்­களை மேற்­கொள்ள வேண்­டிய நிலையில் இருக்­கிறார்.

அவற்றில் சார்க், ஆசியான், பிறிக்ஸ் மாநா­டு­களும், ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டமும் அடங்­கி­யுள்­ளன..

வெளி­நா­டு­க­ளு­ட­னான உற­வு­க­ளுக்கு நரேந்­திர மோடி முக்­கி­யத்­துவம் கொடுப்­ப­வ­ராக இருந்­தாலும், மன்­மோகன் சிங் போன்று அவர் அடிக்­கடி வெளி­நாட்டுப் பய­ணங்­களை மேற்­கொள்ளும் ஒரு­வ­ராக இருக்­க­மாட்டார் என்றே கரு­தப்­ப­டு­கி­றது.

சீர­ழிந்து போயுள்ள நாட்டின் நிர்­வா­கத்தைச் சீர­மைக்கும் வரை, வெளி­நாட்டுப் பய­ணங்­களை முடிந்­த­வ­ரைக்கும் தவிர்க்­கவே அவர் விரும்­பு­வ­தாகத் தெரி­கி­றது.

இது இலங்கை அர­சாங்கம் அவரை கொழும்­புக்கு அழைப்­பதில் எதிர்­நோக்­க­வுள்ள ஒரு சிக்கல்.

அடுத்து, இந்­தி­யா­வுக்குக் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை இலங்கை நிறை­வேற்ற வேண்டும் என்று புது­டில்லி வலு­வா­கவே எதிர்­பார்க்கும் வாய்ப்­புகள் உள்­ளன.

இந்­தியப் பிர­த­ம­ராகப் 10 ஆண்­டுகள் பதவி வகித்த மன்­மோகன் சிங், உல­கெங்கும் சுற்­றிய பிர­த­ம­ராக இருந்த போதிலும், அதி­கா­ர­பூர்வ பய­ண­மாக ஒரு போதும் இலங்­கைக்கு வந்­தி­ருக்­க­வில்லை.

மஹிந்த ராஜபக்ச அர­சாங்கம் எத்­த­னையோ முறை அழைத்தும் அவரை கொழும்­புக்கு கொண்டு வந்து சேர்க்க முடி­யாமல் போனது.

கடை­சி­யாக, கொமன்வெல்த் மாநாட்­டுக்கு வரும் வாய்ப்­பையும், அவர் தமிழ்­நாட்டின் எதிர்ப்­பினால் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை.

ஒரே ஒரு முறை சார்க் மாநாட்­டுக்­காக, 2008ஆம் ஆண்டில் கொழும்பு வந்­தி­ருந்தார் மன்­மோகன் சிங்.

ஆனால், இலங்கை அரசின் விருந்­தி­ன­ராக அவர் ஒரு­போதும் வர­வில்லை.

இது இலங்கை அர­சுக்கு ஒரு சங்­க­ட­மான விவ­கா­ர­மா­கவே இருந்து வந்­தது.

ஆனால், இலங்கை அர­சாங்கம் இந்­தி­யா­வுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வரை கொழும்­புக்கு விருந்­தி­ன­ராகச் செல்­வ­தில்லை என்ற உறு­தியைக் கடைப்­பி­டித்­தி­ருந்தார் மன்­மோகன் சிங்.

இப்­ப­டிப்­பட்ட நிலையில், நரேந்­திர மோடியும் கூட, அதே எதிர்­பார்ப்பைக் கொண்­டி­ருக்­கலாம்.

அதா­வது இந்­தி­யா­வுக்குக் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும் என்று அவர் எதிர்­பார்க்­கலாம்.

அது இலங்கை அர­சுக்கு சிக்­க­லான விடயம்.

அதா­வது 13வது திருத்தம் தொடர்­பான வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற இலங்கை அர­சாங்கம் ஒரு போதும் தயா­ராக இல்லை.

இந்­த­நி­லையில், இந்­தி­யா­வுக்கு கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை மறக்­க­வில்லை என்று காட்­டு­வ­தற்கு, சம்பூர் அனல்மின் திட்­டத்தை அர­சாங்கம் பயன்­ப­டுத்த முனை­யலாம்.

ஆனால், அதற்கு நரேந்­திர மோடி அர­சாங்கம் அவ்­வ­ளவு இல­கு­வாக உடன்­ப­டுமா என்ற கேள்வி உள்­ளது.

அதே­வேளை, சீனாவின் ஆதிக்கம் விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­வதை தடுப்­பதில் தமது அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது என்­பதை தனது முதல் பய­ணத்­தி­லேயே நிரூ­பித்­துள்ளார் நரேந்­திர மோடி.

பூட்டானுக்கு அவர் மேற்கொண்ட பயணம், இந்தியாவுக்கு எதிராக, அதனைச் சுற்றியுள்ள நாடுகளை திருப்பும் சீனத் திட்டத்தை முறியடிப்பதற்­கா­ன­தே­யாகும்.

ஏற்கனவே, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மாலைதீவு, பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் சீனா நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

நரேந்திர மோடி பிரதமரான பின்னர் கூட, துறைமுகம் ஒன்றை அமைக்க சீனாவின் தயவை நாடியுள்ளது பங்களாதேஷ்.

இத்தகைய பின்னணியில், பூட்டானையும் தன் பக்கம் திருப்ப சீனா முயன்று வந்தது.

அதுமட்டுமல்லாமல், தெற்காசியப் பிராந்திய நாடுகளின் ஆதரவை வைத்துக் கொண்டு, சார்க் அமைப்புக்குள்ளேயும் நுழைய சீனா முயன்றது.

ஏற்கனவே சீனாவுக்கு பார்வையாளர் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருப்பினும், சார்க் அமைப்பினுள் சீனா நுழைந்தால் அது தெற்காசியாவில் இந்தியாவினது முக்கியத்துவத்தை இழக்கச் செய்து விடும்.

எனவே இந்தியா இந்த விவகாரத்தில் மிக கவனமாகவே நடந்து கொள்ள முனைகிறது.

பூட்டான் பயணத்தின் போது, இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு அந்த நாட்டில் இடமளிக்கப்படாது என்ற உறுதிமொழியை பெற்று வந்துள்ளார் நரேந்திர மோடி.

இது, சீனாவின் தயவை விரும்பும் அல்லது அதனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு விடுக்கப்பட்ட முக்கியமான செய்தியும் கூட.

சீனாவுடன் நெருங்கிச் செல்வதற்கு இந்தியா இடமளிக்காது என்ற செய்தி இலங்கைக்கும் கூட அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பின்னணியில், சீனாவை வைத்து இந்தியாவையும் அமெரிக்காவையும் கையாளலாம் என்ற இலங்கையின் கணக்கு எந்தளவுக்கு சரியாகும் என்று கூறமுடியாது.

அதாவது சீனாவைக் காட்டி பேரம் பேச முனைவதற்கு இந்தியா இடமளிக்காது என்ற சமிக்ஞை, தெளிவாக காட்டப்படுமிடத்து, கொழும்பு தானாகவே 13ஆவது திருத்தச்சட்டத்தை நோக்கி உந்தப்பட வாய்ப்புள்ளது.

இவற்றையெல்லாம் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது, புதுடில்லியை மிகச் சுலபமாக கையாளலாம் என்று ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்தினால் போடப்பட்ட கணக்கு தவறாகி கொண்டே வருகிறது போலவே தோன்றுகிறது.

- ஹரிகரன்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்