Paristamil Navigation Paristamil advert login

போர்க்குற்ற விசாரணை! தமிழர் தரப்பின் குழப்பம்!

போர்க்குற்ற விசாரணை! தமிழர் தரப்பின் குழப்பம்!

23 மார்கழி 2013 திங்கள் 10:27 | பார்வைகள் : 9565


சர்வதேச போர்க்குற்ற விசாரணை இப்போது மெல்ல மெல்ல விவாதத்துக்குரிய விவகாரமாக மாறி வருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு இன்னமும் நான்கு மாதங்கள் கூட இல்லாத நிலையிலும் அதனை மையப்படுத்திய நகர்வுகள் அனைத்துத் தரப்புகளிலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழலிலும் போர்க்குற்ற விசாரணை குறித்த விவாதங்கள் உச்சம் பெற்று வருவது இயல்பே.

கடந்த காலங்களிலும் இதுபோன்ற சூழல் அவதானிக்கப்பட்டதே. என்றாலும், இப்போது சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பதற்கு வலுவான வாதங்களை முன் வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

போர் முடி­வுக்கு வந்து நான்­கரை ஆண்­டுகள் முழு­தாக முடிந்­துள்ள நிலையில் போர்க்­குற்­றங்கள் தொடர்­பான குற்­றச்சாட்­டு­களை விசா­ரிக்க அர­சாங்கம் இது­வரை காத்­தி­ர­மான, சுதந்­தி­ர­மான எந்த முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­ளாத நிலையே நீடிக்­கி­றது.

இது ஒன்றே, இனியும் பொறுப்­ப­தற்­கில்லை. சர்­வ­தேச விசா­ரணை ஒன்றே வழி என்ற முடி­வுக்கு சர்­வ­தேச சமூகம் வர­வேண்­டிய நிலைக்கு முக்­கிய கார­ண­மாக உள்­ளது.

இந்த நிலையில் ஜேர்­ம­னியின் பிறீமர் நகரில் அண்­மையில் கூடிய நிரந்­தர மக்கள் தீர்ப்­பா­யத்தில் நடத்­தப்­பட்ட விசா­ர­ணையில், இறு­திக்­கட்டப் போரில் இலங்கை அர­ சாங்கம் இனப்­ப­டு­கொ­லை­களை செய்­த­தா­கவும் இதற்கு அமெ­ரிக்கா, இந்­தியா உள்­ளிட்ட பல நாடுகள் உடந்­தை­யாக இருந்­த­தா­கவும் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை அர­சாங்­கத்தை போர்க்­குற்ற விசா­ரணை நீதி­மன்­றத்­துக்கு இழுக்கப் பல­த­ரப்­பி­னரும் பல்­வேறு வித­மான முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரையும், போரின் போது நிகழ்த்­தப்­பட்ட படு­கொ­லைகள் உள்­ளிட்ட மனித உரிமை மீறல்­க­ளையும் ஒன்­றி­ணைக்கும் முயற்­சி­ களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்­கலாம்.

போரின் போது நிகழ்த்­தப்­பட்ட மீறல்­க­ளுக்கு அர­சாங்­கத்தைப் பொறுப்புக் கூற வைக்கும் முயற்­சிகள் எந்­த­ள­வுக்கு வெற்றி பெறும் என்­பதை, அது எந்தக் கண்­ணோட்­டத்­துடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது என்­பதைப் பொறுத்தே அமையும்.

ஏனென்றால், இது ஒன்றும் உலகின் தனித்து ஒதுக்­கப்­பட்­டுள்ள பிரச்­சினை அல்ல.

உலகின் முக்­கி­ய­மான அதி­கார சக்­திகள் எல்லாம் தொடர்­பு­பட்­டுள்ள ஒரு விவ­காரம்.

தமிழர் தரப்பு இந்த விவ­கா­ரத்தில் நடந்து கொள்ளும் முறை­களில் எங்­கேனும் ஒரு சிறிய தவறு நிகழ்ந்­தாலும் கூட ஒட்­ டு­மொத்த பொறுப்­புக்­கூறல் முயற்­சி­க­ளையும் அதல பாதா­ளத்­துக்குள் தள்ளி விடும்.
அண்­மையில் வடக்கு மாகாண முதல்வர் விக்­னேஸ்­வரன் ஒரு விட­யத்தை குறிப்­பிட்­டி­ருந்தார்.

யதார்த்­தத்­துக்கு ஏற்ப இலட்­சி­யங்­களை வகுத்துச் செயற்­பட வேண்டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். அது இந்த விட­யத்தில் முற்­றிலும் பொருந்­தத்­தக்­க­தொரு விடயம்.

போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்­க­ளுக்கு நேரடிக் கார­ண­மா­ன­வர்­களை நோக்கி சுண்­டு­விரல் நீட்­டப்­படப் போகி­றதா அல்­லது மறை­முக ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­வர்­களை நோக்­கியும் குற்­றச்­சாட்டு நீளப்­ போ­கி­றதா என்­பதைப் பொறுத்தே இதன் சாத்­தி­யப்­பாடு அமையப் போகி­றது.

அண்­மைக்­கா­லத்தில் இந்­தி­யாவும் இனப்­ப­டு­கொ­லையில் கூட்டுக் குற்­ற­வாளி என்று வலி­யு­றுத்­தப்­படும் போக்கு தமிழ்­நாட்டில் அதி­க­ரித்­துள்­ளது.

தேர்தல் காலத்தில் காங்­கிரஸ் கட்­சியை பழி­வாங்கும் நோக்கில், உள்ளூர் அர­சியல் சக்­திகள் மேற்­கொள்ளும் இந்த முயற்­சி­களை புலம்­பெயர் தமி­ழர்­களில் ஒரு­ப­கு­தி­யி­னரும் கைதட்டி வர­வேற்­பதைக் காண­முடி­கி­றது.

இங்கு காங்­கி­ரஸைத் தோற்­க­டிப்­பது என்­பது வேறு விடயம். இந்­தி­யாவைக் குற்­ற­வா­ளி­யாக நிறுத்­து­வ­தென்­பது வேறு விடயம்.

ஆனால், இந்த இரண்­டையும் போட்டுக் குழப்பிக் கொண்டு மேற்­கொள்­ளப்­படும் முயற்­சிகள் ஜெனீ­வாவில் தமிழர் தரப்­புக்குப் பாதிப்­புக்­களைத் தரக்­கூ­டி­யது என்­பதை பலரும் நினைவில் கொள்­ள­வில்லை.

மன்­னாரில் நெல்சன் மண்­டே­லாவின் நினைவு நிகழ்வில் தமி­ழ­ரசுக் கட்­சியின் இளை­ஞ­ரணிப் பிர­முகர் ஒருவர் உரை­யாற்­றிய போது இந்­தி­யாவும் போர்க்­குற்­றங்­க­ளுக்குக் பொறுப்­புக்­கூற வேண்டும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதனை தமிழ் இணைய ஊட­கங்கள் பலவும் முக்­கிய செய்­தி­யாக வெளி­யிட்­டி­ருந்­தன.

ஆனால், அது எந்­த­ள­வுக்கு போர்க்­குற்ற விசா­ர­ணையைப் பல­வீ­னப்­ப­டுத்தும் என்­ப­தை­யிட்டு பெரி­தாக யாரும் சிந்­தித்­த­தாகத் தெரி­ய­வில்லை.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை முன்­னி­லைப்­ப­டுத்தி அதனை நடத்­திய இல ங்கை அர­சாங்­கத்­தையும் அதற்கு உடந்­தை­யாக இருந்த நாடுகள், நபர்­க­ளையும் சர்­வ­தேச அளவில் குற்­ற­வா­ளி­க­ளாக்க தமிழர் தரப்பு எத்­த­கைய முயற்­சி­களை மேற்­கொண்­டாலும் அது பலிக்கப் போவ­தில்லை.

ஏனென்றால் புலி­க­ளுக்கு எதி­ரான போருக்­கான நியா­யப்­பா­டு­களை உலகம் இன்­னமும் உண்­மை­யா­ன­தா­கவே ஏற்­றுக் ­கொள்­கி­றது.

அது தவ­றாக முன்­னெ­டுக்­கப்­பட்ட போர் என்ற கருத்து உலகின் எந்­த­வொரு நாட்­டி­டமும் ஏற்­ப­ட­வில்லை. அதனால் தான் புலிகள் இயக்­கத்தின் இரா­ணுவ வல்­லாண்மை முற்­றா­கவே அழிக்­கப்­பட்டு போர் முடி­வுக்கு வந்து நான்­கரை ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரும் அந்த இயக்­கத்தின் மீது தடை­வி­தித்­துள்ள 32 நாடு­களில் ஒன்றுகூட அதை நீக்க முனை­ய­வில்லை.

அத்­துடன் போரின் போது நடந்த மீறல்­க­ளுக்குப் பொறுப்புக் கூற­வேண்டும் என்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தும் அர­சியல் தீர்­வுக்கு வலி­யு­றுத்தும் அமெ­ரிக்கா, இந்­ தியா போன்ற நாடு­களும் கூட ஏதோ ஒரு வகையில் இந்தப் போருக்கு ஆத­ரவு அளித்­துள்­ளன.

அமெ­ரிக்கா கொடுத்த தக­வல்­களின் பேரில் தான் புலி­களின் ஆயு­தக்­கப்­பல்கள் மூழ்­க­டிக்­கப்­பட்­டன. இந்­தியா கொடுத்த ஆயு­த­ த­ள­பா­டங்கள் மற்றும் போர்க்­கப்­பல்கள் தான், புலி­க­ளுக்கு எதி­ரான போர் தீவிரம் பெறக் கார­ண­மா­யின.

எனவே, விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ ரான போரை நடத்­திய, அதற்கு ஆத­ர­வ­ளித்த அல்­லது உடந்­தை­யாக இருந்த நாடுக­ளை­யெல்லாம், சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் நிறுத்த வேண்டும் என்று எதிர்­பார்ப்­பது இன்றைய நிலையில் மிகை­யா­னது.

அத்­த­கைய எதிர்­பார்ப்பு ஒரு­போதும் நிறை­வேறப் போவ­தில்லை. அத்­த­கை­ய­தொரு முயற்­சியில் எவ­ரே னும் இறங்­கினால், அதனை ஒரு நாடும் ஆத­ரிக்கப் போவதும் இல்லை. ஆனால், அர­சாங்­கமோ மிகத் தந்­தி­ர­மாக இந்தப் போர்க்­குற்ற விவ­கா­ரத்­துக்குள் இந்­தி­யா­வையும் இழுத்து வரும் முயற்­சியில் இறங்­கி­யுள்­ளது.

அதா­வது, இந்­தியப் படை­களும் தமி­ழர் ­களைப் படு­கொலை செய்­துள்­ள­தான கருத்­து­க­ளையும், ஆதா­ரங்­க­ளையும் அர­சாங்கம் மறை­மு­க­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் முன்­வைக்கத் தொடங்­கி­யுள்­ளது,
இது, ஜெனீ­வாவில் அமெ­ரிக்­காவின் முயற்­சி­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து வரும் இந்­தி­யாவை அதி­லி­ருந்து விலக வைப்­ப­தற்­கான ஒரு நகர்வு என்­பதே உண்மை.

இத்­த­கைய கட்­டத்தில் புலி­க­ளுக்கு எதி­ரான போரை மையப்­ப­டுத்தி, அதில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­களை சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இழுக்க மேற்­கொள்­ளப்­படும் முயற்­சிகள் ஒருபோதும் வெற்­றி­பெறப் போவ­தில்லை.

அதே­வேளை, போரின் போது நிகழ்ந்த மீறல்கள், குற்­றங்­களை விசா­ரிக்க வலி­யு­றுத்தும் முயற்­சி­க­ளையும் அது பல­வீ­னப்­ப­டுத்தி பின்­வாங்க வைத்­து­விடும். போரின் இறு­திக்­கட்­டத்தில் நிகழ்ந்த மீறல்­க­ளுக்கு பொறுப்புக் கூற­வைக்கும் முயற்­சிகள் தான், சர்­வ­தேச அளவில் வலு­வுடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

அதை பல­வீ­னப்­ப­டுத்த அர­சாங்கம் தன் ­னா­லான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது. அத்­த­கை­ய­தொரு முயற்சி தான் இந்­தி­யாவும் பொறுப்­புக்­கூற வேண்டும் என்ற கருத்து.

பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரத்தில் மட்­டு­மன்றி, இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சி­யல்­தீர்வு உள்­ளிட்ட எல்லா விட­யங்­க­ளி­லுமே, இந்­தியா முக்­கி­ய­மானதொரு பாத்­தி­ரத்தை வகிக்­கி­றது.

இந்­தி­யா­வுக்கு எதி­ராக, கத்­தியை நீட் டிக் கொண்டு ஒரு­போதும் இலங்­கையில் நிலை­யான அமை­தியை உருவாக்கவோ, தமிழ ருக்கான ஒரு தீர்வைப் பெற்று விடவோ முடியாது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இந்த விடயத்தில் முழுமையான கருத்து ஒருமைப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

யதார்த்தத்தையும், பூகோள அரசியல் சூழ லையும் புரிந்து கொள்ளாமல், எந்தத் தரப்பு எத்தகைய வலுவான முயற்சிகளை மேற் கொண்டாலும் அது பயனற்றுப் போகும்.

குறிப்பாக விடுதலைப் புலிகளையே அதற்கு உதாரணமாக கொள்ளலாம்.

விடுதலைப் புலிகள் கூட கடைசியில் ஒரு கட்டத்தில் இந்தியாவின் தயவுக்காக, அதன் ஆதரவுக்காக ஏங்கினார்கள் என்பது வெளிப்படை. அதுபோலத் தான் அமெரிக்கா விடயத்திலும்.

சர்வதேச சக்திகளின் ஆதரவுடன்தான், தமிழர்கள் இனி தமக்கான எந்த தீர்வையும் வென்றெடுக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டு விட்ட நிலையில், முடிந்தளவுக்கு வெளியுலகில் நண்பர்களை சம்பாதித்துக் கொள்வதே புத்திசாலித்தனமான அணுகு முறையாக இருக்கும்.

- சுபத்ரா

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்