Paristamil Navigation Paristamil advert login

தேங்காய் சாதம்

தேங்காய் சாதம்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9576


காலையில் வேகமாவும், நன்கு சுவையுடனும் ஒரு அருமையான கலவை சாதம் செய்ய நினைத்தால், அதற்கு தேங்காய் சாதம் சரியானதாக இருக்கும். மேலும் தேங்காய் சாதமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபி. அதுமட்டுமல்லாமல், தேங்காய் சாதத்தை பலர் பலவாறு சமைப்பார்கள். இப்போது தேங்காய் சாதத்திலேயே மிகவும் எளிமையான செய்முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சித்து பார்த்து, எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்: 

 

அரிசி - 1 கப் 

தண்ணீர் - 2 கப் 

தேங்காய் - 1/2 கப் (துருவியது) 

கடுகு - 1/2 டீஸ்பூன் 

கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 

முந்திரி - 1/4 கப் 

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 

வரமிளகாய் - 3-4 

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 

கறிவேப்பிலை - சிறிது 

உப்பு - தேவையான அளவு 

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 

 

செய்முறை: 

 

* முதலில் அரிசியை நன்கு 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். 

 

* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கி, சாதத்தை தட்டில் போட்டு உலர வைக்க வேண்டும். 

 

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, முந்திரி, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். * பின்பு துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும். 

 

* கலவையானது ஓரளவு பொன்னிறமாக மாறும் போது, சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும். * இப்போது சூப்பரான  தேங்காய் சாதம் ரெடி!!!

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்