Paristamil Navigation Paristamil advert login

மொராக்கோ நிலநடுக்கம் - தேன்நிலவுக்குச் சென்ற தம்பதியினர் உட்பட நான்குபிரெஞ்சு நபர்கள் பலி

மொராக்கோ நிலநடுக்கம் - தேன்நிலவுக்குச் சென்ற தம்பதியினர் உட்பட நான்குபிரெஞ்சு நபர்கள் பலி

12 புரட்டாசி 2023 செவ்வாய் 06:33 | பார்வைகள் : 5539


மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுதியுள்ளநிலையில், கொல்லப்பட்டவர்களில் நான்கு பிரெஞ்சு நாட்டவர்களும் உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மொத்தமாக 2,862 பேர் இந்த நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டுள்ளனர். 2,562 பேர்காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் நால்வர் பிரெஞ்சு நாட்டவர் எனவும், தேன்நிலவுக்காக அங்கு பயணித்திருந்த இரண்டு இளம் தம்பதிகளும் அவர்களில்அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

பிரான்சின் Meaux நகரில் வசிக்கும் அவர்கள் நிலநடுக்கம் இடம்பெறுவதற்குஇருநாட்கள் முன்னதாக மொராக்கோவின் Marrakech நகருக்குபயணித்திருந்தனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்