Paristamil Navigation Paristamil advert login

அ.தி.மு.க., கூட்டணி முறிவு: பா.ஜ., மேலிடத்திடம் நிர்மலா சீதாராமன் அறிக்கை

அ.தி.மு.க., கூட்டணி முறிவு: பா.ஜ., மேலிடத்திடம் நிர்மலா சீதாராமன் அறிக்கை

30 புரட்டாசி 2023 சனி 18:28 | பார்வைகள் : 2580


அ.தி.மு.க., கூட்டணி முறிவு குறித்து பா.ஜ., மேலிடத்திடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில் பா.ஜ., உடனான கூட்டணியை அ.தி.மு.க., முறித்து கொண்டுள்ளது. இனிமேல், எப்போதும் பா.ஜ., உடன் கூட்டணி கிடையாது என அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ., மேலிடத்தின் உத்தரவின் பேரில், கூட்டணி முறிவு குறித்து நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

பா.ஜ., மேலிடத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் கூட்டணி முறிவால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அ.தி.மு.க., இன்றி பா.ஜ.,வால் வலுவான கூட்டணி அமைக்க முடியுமா என்பது தொடர்பாகவும் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்