Paristamil Navigation Paristamil advert login

தக்காளி குருமா

தக்காளி குருமா

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9374


 காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பும் போது, தோசை அல்லது இட்லிக்கும், சாதத்திற்கும் ஏற்றவாறான சைடு டிஷ் என்ன உள்ளது என்று யோசித்தால், அப்போது தக்காளி குருமாவை செய்யுங்கள். இந்த தக்காளி குருமாவானது தோசைக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் அருமையாக இருக்கும். மேலும் இதனை செய்வதும் மிகவும் ஈஸி. இங்கு அந்த தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை காலை வேளையில் செய்து சுவைத்து மகிழுங்கள். 

 
தேவையான பொருட்கள்: 
 
தக்காளி - 3 (நறுக்கியது) 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)ங 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
 
அரைப்பதற்கு... 
 
துருவிய தேங்காய் - 1/4 கப் 
சோம்பு - 3/4 டீஸ்பூன் 
இஞ்சி - 1/4 இன்ச் 
பச்சை மிளகாய் - 1 
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
 
தாளிப்பதற்கு... 
 
எண்ணெய் - 3 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச் 
கிராம்பு - 2 
ஏலக்காய் - 1 
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் 
 
செய்முறை: 
 
முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்க மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்க வேண்டும். 
 
பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். தக்காளியில் இருந்து பச்சை வாசனை போன பின்னர், அதில் மிளகாய் தூள், மல்ல தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். 
 
இறுதியில் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தக்காளி குருமா ரெடி!!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்