வெடிகுண்டு எச்சரிக்கை - மூடப்பட்ட பாடசாலைகள்!!

5 ஐப்பசி 2023 வியாழன் 12:24 | பார்வைகள் : 10611
வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளன என்ற தகவலையடுத்து கிரனோபிள் நகரின் எட்டு லிசேக்கள் உடனடியாக மூடப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எட்டு லிசேக்களிற்கும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை கிடைத்துள்ளது.
அதே நேரம் பாதுகாப்புக் காரணங்களிற்காக கொலேஜ்களும் மூடப்பட்டுள்ளன.
ஆனால் இந்தத் தகவலை கணிணி மூலம் வழங்கியதான சந்தேகத்தில், கொலேஜ் மாணவன் ஒருவர் கைது செய்ய்பட்டு பெற்றோருடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்திருந்தாலும், எச்சரிக்கை நிலை தொடர்கின்றது.
வெடிகுண்டு அகற்றும் படையினர் குறிப்பிட்ட லிசேக்களில் தேடுதல் நடாத்தி வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1