Paristamil Navigation Paristamil advert login

சில்லி பிரட் உப்புமா

சில்லி பிரட் உப்புமா

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9850


 எப்போதும் இட்லி, தோசை செய்வதால் குழந்தைகள் காலை உணவை சாப்பிட மறுக்கிறார்களா? குழந்தைகளுக்கு பிடித்தவாறு காலை உணவை செய்ய வேண்டுமா? அப்படியானால் வாரம் ஒருமுறை சில்லி பிரட் உப்புமா செய்து கொடுங்கள். இது ஒரு சைனீஸ் ரெசிபி. இருந்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

இங்கு அந்த சில்லி பிரட் உப்புமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து உங்கள் குழந்தைக்கு செய்து கொடுங்கள்.
 
தேவையான பொருட்கள்:
 
பிரட் - 6 துண்டுகள் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
வரமிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
அஜினமோட்டோ - 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
 
செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
 
பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி, சர்க்கரை, உப்பு, அஜினமோட்டோ சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
 
பிறகு அத்துடன் தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர் சேர்த்து நன்கு கிளறி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
 
தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பிரட் துண்டுகளை சேர்த்து பிரட்டி, தண்ணீர் வற்றியதும் இறக்கினால், சில்லி பிரட் உப்புமா ரெடி!!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்