Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் - 7 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் - 7 பேர் பலி

14 ஐப்பசி 2023 சனி 02:53 | பார்வைகள் : 3781


வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில்  தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா மசூதியில்  நேற்று (13.09.2023)  தொழுகைக்கு வந்த வழிபாட்டாளர்கள் மத்தியில் இருந்த ஒருவர் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 

மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

பாக்லான் மாகாணத்தின் தலைநகர் போல்-இ-கோம்ரி நகரில் இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு கொராசன் மாகாணத்தில் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் ஐஎஸ்-ன் பிராந்திய துணை அமைப்பு, நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நடாத்தி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு பின்னாலும் அந்த அமைப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்