Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல்- ஹமாஸ் போரின் தீவிரம்

இஸ்ரேல்- ஹமாஸ் போரின் தீவிரம்

12 ஐப்பசி 2023 வியாழன் 08:33 | பார்வைகள் : 4743


காசா மீது இஸ்ரேலும், இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரும் மாறி மாறி தாக்குதலை நடத்தி வருகின்றார்கள். 

இதன்போது ஹமாஸ் அமைப்பானது 'இஸ்ரேலியர்கள் உண்மையான நரகத்தைப் பார்க்கப்போகின்றார்கள்' என்று ஒரு விடயத்தை உறுதிப்படுத்தி கூறியிருகின்றார்கள்.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது கடந்த சனிக்கிழமை 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை ஆரம்பித்தனர்.

இதையடுத்து உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.

ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படும் இடம் என தெரிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியது. 

இதன்போது இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் காசா நகரம் முழுவதும் சூறையாடப்பட்டது.  

இந்நிலையில் 'இஸ்ரேலியர்கள் உண்மையான நரகத்தைப் பார்க்கப்போகின்றார்கள்' என்று ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்திருந்தார்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்