Paristamil Navigation Paristamil advert login

இலங்கை பணியாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் நடவடிக்கை நிறுத்தம்!

இலங்கை பணியாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் நடவடிக்கை நிறுத்தம்!

14 ஐப்பசி 2023 சனி 11:17 | பார்வைகள் : 2433


வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய மாத்திரமே, இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்ப முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது இஸ்ரேலுக்கான விமான சேவைகள் தற்காலிமாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில், இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவது வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக்கு அமையவே முன்னெடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் குறிப்பிட்டுள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்