Paristamil Navigation Paristamil advert login

அச்சுறுத்தல் - பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட லூவர் அருங்காட்சியகம்!

அச்சுறுத்தல் - பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட லூவர் அருங்காட்சியகம்!

14 ஐப்பசி 2023 சனி 11:27 | பார்வைகள் : 5007


லூவர் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அருங்காட்சியகம் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று சனிக்கிழமை மூடப்பட்டுள்ளது.

“பாதுகாப்பு காரணங்களுக்கான லூவர் அருங்காட்சியகம் இன்று ஒக்டோபர் 14, சனிக்கிழமை மூடப்படுகிறது. இன்றை நாளுக்கான நுழைவுச் சிட்டைகளை முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் மீள அளிக்கப்படும்!” என லூவர் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.

லூவர் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அங்கிருந்த 15,000 பேர் வெளியேற்றப்பட்டு அருங்காட்சியகம் மூடப்பட்டது. பின்னர் ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்