சமூக பாதுகாப்புக்கான வரவுசெலவுத் திட்டம்! - மீண்டும் 49.3 பயன்படுத்திய பிரதமர்!!

26 ஐப்பசி 2023 வியாழன் 07:00 | பார்வைகள் : 9889
2024 ஆம் ஆண்டின் சமூக பாதுகாப்புக்கான வரவுசெலவுத் திட்டத்தை (Budget de la Sécurité sociale) நிறைவேற்றும் முனைப்போது அரசாங்கம் உள்ளது. இதற்காக மீண்டும் சர்ச்சைக்குரிய 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் பயன்படுத்தியுள்ளார்.
ஒக்டோபர் 25, புதன்கிழமை பாராளுமன்றத்தில் இந்த வரவுசெலவுத்திட்டத்தின் அறிக்கையினை சமர்ப்பித்தார். பாராளுமன்றத்தில் வாக்குகள் இன்றி அதனை நிறைவேற்றுவதற்காக 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை அவர் பயன்படுத்தியுள்ளார். குறித்த அரசியலமைப்புச் சட்டமானது, அவசர காலத்தின் போது சட்டம் ஒன்றை ஏற்படுத்த அல்லது உருவாக்க பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு வாக்குகள் இன்றி வெறும் 15 வீதமான ஆதரவுடன் நிறைவேற்றக்கூடிய சட்டமாகும். அதனை இதுவரை பல்வேறு காரணங்களுக்கு (ஓய்வூதிய வயதெல்லை போன்ற சட்டங்களை உருவாக்க பிரதமர் பயன்படுத்தியிருந்தார்) பயன்படுத்திய பிரதமர், தற்போதும் அதனை பயன்படுத்திக்கொண்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு, 2024 ஆம் ஆண்டுக்கான பொதுவான வரவுசெலவுத் திட்டத்தைனை இதே அரசியலமைப்பு சட்டத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றியிருந்த நிலையில், நேற்று “சமூக பாதுகாப்புக்கான வரவுசெலவுத் திட்டம்” இனை நிறைவேற்ற மீண்டும் பயன்படுத்தினர்.