Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண் விமானத்தில் மரணம்

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண் விமானத்தில் மரணம்

23 ஐப்பசி 2023 திங்கள் 10:55 | பார்வைகள் : 2437


வீட்டு வேலைக்காக கட்டார் சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும் போது விமானத்தில் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் இன்று (23) அதிகாலை 1.17 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 மூலம் கத்தாரின் தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்துள்ளார் , விமானம் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த போது இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

குறித்த பெண்ணின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்