Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இலங்கையில் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

23 ஐப்பசி 2023 திங்கள் 15:35 | பார்வைகள் : 5087


இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 6 புதிய பகுதிகளுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேசத்திற்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின் தும்பனை பகுதிக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கன மற்றும் வரக்காபொல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல மற்றும் ரிதிகம பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்