இலங்கையில் அதிர்ச்சி - கணவரை காரினால் மோதி கொலை செய்த மனைவி

30 ஐப்பசி 2023 திங்கள் 07:12 | பார்வைகள் : 10106
மாவனெல்லை பிரதேசத்தில் தனது கணவரை காரினால் மோதி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மனைவி மற்றும் மனைவியின் சட்டபூர்வமற்ற கணவர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கடந்த 27ஆம் திகதி காரில் மோதி விபத்துக்குள்ளாகி மாவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விபத்து திட்டமிடப்பட்ட கொலை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மனைவியின் சட்டபூர்வமற்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1