Paristamil Navigation Paristamil advert login

நாயாக வாழ்ந்து வரும் ஜப்பானியர்

நாயாக வாழ்ந்து வரும் ஜப்பானியர்

31 ஆடி 2023 திங்கள் 07:41 | பார்வைகள் : 1197


ட்விட்டரில் 'டோகோ' என்று அழைக்கப்படும் ஜப்பானியர் நாயாக வாழ்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு, டோகோ சுமார் ரூ.12 லட்சத்தை செலவு செய்து, எஆயை போன்று தோற்றமளிக்கும் வகையிலான உடை ஒன்றை தயார் செய்தார்.

அப்போதிருந்து, அவர் தனது 'நாய் வாழ்க்கை' பற்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் தனது யூடியூப் சேனலிலும் பதிவிட்டு வருகிறார்.

தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான ஆடைகளை தயாரிக்கும் ஜப்பானிய நிறுவனமான Zeppet நிறுவனம், Toco என்ற அந்த நபருக்காக நாய் உடையை வடிவமைத்துள்ளது.

இதை தயாரிக்க நிறுவனம் 40 நாட்கள் எடுத்துக் கொண்டது.

டோகோவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இன்று மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதில் டோகோ தனது சில நாய் நண்பர்களுடன் மேற்கொண்ட தனது முதல் நடைப்பயணத்தைக் காணலாம்.

டோகோவின் நண்பர்களுக்கு அவரது மாற்றம் தெரியாத வகையில், அவர் தனது நாய் உடையிலேயே வருகிறார்.

அவரது ஒவ்வொரு வீடியோவிலும், டோகோ எப்போதும் ஒரு நாய் உடையில் காணப்படுகிறார்.

மேலும் அவரது முகத்தை ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை.

டோகோ தனது பொழுதுபோக்கைப் பற்றி அவளுடைய நண்பர்கள் அறிந்தால், அவர்கள் அதை மிகவும் விசித்திரமாக நினைப்பார்கள் என்று பயப்படுகிறார்.

ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவில், டோகோ ஒரு நாயாக பூங்காவில் நடந்து செல்வதைக் காணலாம்.

வீடியோ சமூல வலைதளங்களில் மிகவும் வைரலாக ஆகி வருகிறது.

'டோகோ என்று அழைக்கப்படும் ஜப்பானியர் ஒருவர், நாயாக வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றுவதற்காக ஒரு ஆடைக்காக $16,000 செலவு செய்தார். நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு கூட அவரது அடையாளம் தெரியாமல் உள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்