Paristamil Navigation Paristamil advert login

வீதிகளில் வைத்து 97 பாலியல் வல்லுறவு! - கடந்த வருடத்தில் பரிசில் பதிவு!

வீதிகளில் வைத்து 97 பாலியல் வல்லுறவு! - கடந்த வருடத்தில் பரிசில் பதிவு!

18 சித்திரை 2024 வியாழன் 16:22 | பார்வைகள் : 2090


கடந்த 2023 ஆம் ஆண்டில் பரிசில் வீதிகளில் வைத்து 97 வரையான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 2% சதவீதத்தால் அதிகமாகும். 2018 ஆம் ஆண்டில் இருந்து பரிசில் இதுபோன்று 90 தொடக்கம் 100 வரையான பாலியல் வல்லுறது வீதிகளில் இடம்பெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்ற வருடத்தில் 97 பாலியல் வல்லுறவு பதிவானதாகவும், அவர்களில் 77% சதவீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் எனவும், அதில் 30 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 36 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்