Paristamil Navigation Paristamil advert login

யாழில். வீடொன்றின் குளியறையில் இருந்து மீட்கப்பட்ட சடலம்

 யாழில். வீடொன்றின் குளியறையில் இருந்து மீட்கப்பட்ட சடலம்

30 சித்திரை 2024 செவ்வாய் 05:15 | பார்வைகள் : 613


மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் சிவகுமார் (வயது 60) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள்,  குளியலறையில் சடலமாக இருப்பதை அவதானித்து, அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற மானிப்பாய் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்