Paristamil Navigation Paristamil advert login

மே தின ஊர்வலம்! - 150,000 பேர் வரை பங்கேற்கலாம்..!!

மே தின ஊர்வலம்! - 150,000 பேர் வரை பங்கேற்கலாம்..!!

30 சித்திரை 2024 செவ்வாய் 15:22 | பார்வைகள் : 1778


நாளை, மே 1 ஆம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு ஊர்வலங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.

மொத்தமாக 270 ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 120,000 இல் இருந்து 150,000 வரையான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிய முடிகிறது. பரிசில் 15,000 தொடக்கம் 30,000 வரையானவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

Lyon, Toulouse, Lille, Grenoble, Pau, Perpignan, Marseille, Bayonne, Limoges, Bordeaux, Nantes, Montpellier, Saint-Nazaire, Caen, Besançon, Rennes, Tours, Agen மற்றும் Strasbourg உள்ளிட்ட நகரங்களில் இந்த பேரணிகள் இடம்பெற உள்ளன.

அதேவேளை, முந்தைய ஆண்டுகளை விடவும் இம்முறை குறைந்த அளவான ஊழியர்களே பேரணிகளில் கலந்துகொள்வார்கள் என அறிய முடிகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்