Paristamil Navigation Paristamil advert login

நோயாளியை காப்பாற்ற பரிசில் தரையிறங்கிய உலங்குவானூர்தி!

நோயாளியை காப்பாற்ற பரிசில் தரையிறங்கிய உலங்குவானூர்தி!

6 வைகாசி 2024 திங்கள் 18:04 | பார்வைகள் : 1823


பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இன்று திங்கட்கிழமை உலங்குவானூர்தி ஒன்று அவசரமாக தரையிறங்கியது. மக்கள் பாதுகாப்புக்காக இயங்கும் குறித்த வானூர்தி, நோயாளி ஒருவரை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுவதற்காக தரையிறக்கப்பட்டது. 

rue Saint-Charles occupait வீதியில் உள்ள 4 அடுக்கு கட்டிடம் ஒன்றில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் ஒருவர் கோமா நிலைக்குச் சென்றதால், இந்த உலங்குவானூர்தி வரவழைக்கப்பட்டது. 

பின்னர், இளைஞன் அதில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். 

 

(புகைப்படம் : மாதிரி காட்சி. கோப்பில் இருந்து..)

வர்த்தக‌ விளம்பரங்கள்