Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வாக்களித்தவுடன் உடனடியாக வீடுகளுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவிப்பு

இலங்கையில் வாக்களித்தவுடன் உடனடியாக வீடுகளுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவிப்பு

18 புரட்டாசி 2024 புதன் 09:29 | பார்வைகள் : 6503


இலங்கையில் எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும், நாட்டு மக்களிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது.

காரணமின்றி வாக்குச் சாவடிகளில் அல்லது அருகில் இருக்க வேண்டாம் என்றும் வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்தில் தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்