Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : உயிரைப் பறித்த - விநோத நோய்..!!

பரிஸ் : உயிரைப் பறித்த - விநோத நோய்..!!

21 தை 2025 செவ்வாய் 17:41 | பார்வைகள் : 5448


பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் வசித்த 62 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார். அவரது விநோத நோய்த்தாக்கமே அவரது உயிரைப் பறித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 ஆம் வட்டாரத்தின் rue Grappelli வீதியில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் திடீரென தீப்பிடித்துள்ளது. தீ பரவியதை அடுத்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நிலையில், நிலமை கைமீறிச் சென்றிருந்தது. அங்கு வீட்டில் தனியாக வசித்த 62 வயதுடைய நபர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

அவர் 'தனிமையை' விரும்பும் syndrome de Diogène எனும் நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகியிருந்ததாகவும், வீட்டு முழுவதும் குப்பை கூழங்களை சேகரித்து வைத்திருந்ததாகவும், அதில் இருந்த ஏதோ ஒன்றே தீ பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எந்த ஒரு பொருளையும் வீசாமல், அதனை சேகரித்து வைக்கும் விநோத பழக்கம் கொண்டவர்களையே "syndrome de Diogène" நோயாளர்கள் என சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் பல நூறு பேர் இந்த நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1966 ஆம் ஆண்டு பிரான்சில் முதன் முறையாக இந்த நோய் கண்டறியப்பட்டது.

(புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளவை - மாதிரி புகைப்படங்களாகும்.)
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்