பனிப்பொழிவு : நான்கு மாவங்களுக்கு எச்சரிக்கை!!

8 மாசி 2025 சனி 09:20 | பார்வைகள் : 5560
பனிப்பொழிவு காரணமாக இன்று பெப்ரவரி 8, சனிக்கிழமை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு பல மாவட்டங்களில் பனிப்பொழிவு பதிவாகியிருந்தது. குறிப்பாக இல் து பிரான்ஸ் மாகாணத்தின் சில நகரங்களிலும் பனிப்பொழிவு கொட்டித்தீர்த்திருந்தது. இந்நிலையில், இன்று சனிக்கிழமை இரவும் பனிப்பொழிவு பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன் காரணமாக Ardèche, Haute-Loire, Lozère மற்றும் Aveyron ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.