Paristamil Navigation Paristamil advert login

வியாழனைப் பற்றி தெரிந்து கொள்வோம்

வியாழனைப் பற்றி தெரிந்து கொள்வோம்

19 வைகாசி 2012 சனி 18:56 | பார்வைகள் : 9653


 சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும்.

 
உதாரமாக பூமியின் சுற்றளவு 12756 கிலோமீற்றர். ஆனால் வியாழனின் சுற்றளவு 143000 கிலோ மீற்றர் விசாலமானது. சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களையும் வியாழனுள் இட்டாலும் மிஞ்சமாக இன்னும் இடம் இருக்குமாம் அந்தளவிற்கு மிகவும் பெரியது இந்த வியாழன்.
 
வியாழனின் நிறை இன்னும் 80 வீதம் அதிகம் இருந்து இருந்தால் அதுவே ஒரு நட்சத்திரமாக மாறியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
 
இது கனிமங்கள் நிறைந்த கோளாகும். இங்கு ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் நிரம்பியுள்ளது.
 
வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் (9 மணி 50 நிமிடம்) தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்று்வதால் தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் உள்ளன. சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு, சிறுகோள்கள் (Asteroids'), வால் விண்மீன்கள் (Comets) போன்ற வான் பொருள்களைத் தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமையாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
 
பூமியை விட வியாழனின் ஈர்ப்புவிசை 2.5 மடங்கு அதிகமாக இருக்கும். உதாரணமாக பூமியில் ஒருவரின் நிறை 100 கிலோவாக இருந்தால் வியாழனில் 250 கிலோ நிறையாக இருக்கும் என்கிறது ஆய்வுகள்.
 
வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம் (Great Red Spot) உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. இதனால் அங்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்வதில் சிரமங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. இது வளிமண்டத்தில் காணப்படும் தூதுகள் என்று சொல்லப்படுகின்றது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலீலியோவால் 1610ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்தம் 63 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. இதனை விட வேறு நிலவுகளும் இருக்கலாம் எதிர்காலத்தில் கண்டுபிடிக்க வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 
இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பூமியை பாதுகாக்கும் மிகவும் பிரதான கோள் இதுவாகும். அதாவது வளிமண்டத்தில் ஏற்படும் துணிக்கைகளை தன்னுள் ஈர்த்துக் கொள்வதால் பூமியை நோக்கி வரும் ஆபத்துக்கள் குறைவடைகின்றன. அதாவது அண்மையில் கூட பூமியை நோக்கி மிகப் பெரிய கற் துணிக்கை ஒன்று வேகமாக வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அது வியாழனில் மோதுண்டதால் பூமி தப்பிக் கொண்டது. வியாழனில் அந்த துணிக்கை மோதுண்டதால், பூமியை விட பெரிய பள்ளம் அங்கு உருவாகியுள்ளது.
 
வியாழனை சுற்றி உள்ள நிலவுகளில் ஒன்றில் நீர் இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கு உயிர் இனம் எதுவும் வாழ கூடிய சாத்தியங்கள் இருக்கலாம். வேற்றுக்கிரகவாசிகளின் (Aliens) இருப்பிடமாக கூட இது இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்