Paristamil Navigation Paristamil advert login

விசேட செய்தி : Fleury-Mérogis சிறைச்சாலை கைதிகள் இருவர் மாயம்

விசேட செய்தி : Fleury-Mérogis சிறைச்சாலை கைதிகள் இருவர் மாயம்

13 புரட்டாசி 2023 புதன் 14:58 | பார்வைகள் : 5103


Fleury-Mérogis சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.

 

 

நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் குறைத்த சிறைச்சாலையில் இருந்துகைதிகள் சிலர் Fontainebleau (Seine-et-Marne) காட்டுப்பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். குறித்த காட்டுப்பகுதியில் ஓய்வுக்காக சில நடவடிக்கைகளில்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

அதன்போது ஓட்டப்போட்டி ஒன்றில் கலந்துகொண்ட குறித்த இரு கைதிகள்அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 

 

கைதிகள் தப்பி ஓடியுள்ளதை சிறைச்சாலை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இருவரும் தேடப்பட்டு வருகின்றனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்