Paristamil Navigation Paristamil advert login

புயல் எச்சரிக்கை! - பரிசில் பூங்காக்கள், கல்லறைகள் மூடப்படுகின்றன!

புயல் எச்சரிக்கை! - பரிசில் பூங்காக்கள், கல்லறைகள் மூடப்படுகின்றன!

15 சித்திரை 2024 திங்கள் 16:02 | பார்வைகள் : 3530


புயல் எச்சரிக்கை காரணமாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் பரிசில் உள்ள பல்வேறு பூங்காக்கள் மற்றும் கல்லறைகள் மூடப்பட்டுள்ளன.

பிற்பகல் 4 மணி முதல் இன்றைய நாள் முழுவதும் அவை மூடப்படுவதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது. பூங்கா, கல்லறை, புல்வெளிப்பகுதிகள் அனைத்தும் மூடப்படுவதாகவும், புயல் காரணமாக மர முறிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 80 தொடக்கம் 90 கி.மீ வரை வேகத்தில் புயல் வீசும் என எச்சரிக்கப்பட்டு, இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்