Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிவாயு விலை அதிகரிப்பு

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிவாயு விலை அதிகரிப்பு

4 புரட்டாசி 2023 திங்கள் 05:40 | பார்வைகள் : 4028


லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 145ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிய விலை 3,127 ரூபாவாக பதிவாகியுள்ளது.

5 கிலோ சிலிண்டர் 58 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 1,256 ரூபாவாக பதிவாகியுள்ளது.

2.3 கிலோ சிலிண்டர் 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 587 ரூபாவாக பதிவாகியுள்ளது

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்