Paristamil Navigation Paristamil advert login

24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு... ஐ.நா விடுத்த எச்சரிக்கை!

24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு... ஐ.நா விடுத்த எச்சரிக்கை!

12 சித்திரை 2024 வெள்ளி 13:14 | பார்வைகள் : 2560


தற்போது நிலவிவரும் கடுமையான வெப்ப அலை காரணமாக

கிழக்கு ஆசிய நாடுகளில் 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. 

இதன் காரணமாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதேவேளை, கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 24 கோடி குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வீடுகளிலும், பாடசாலைகளிலும் குழந்தைகள் வெயிலில் விளையாடுவதை தவிர்க்கவும், கோடை காலத்திற்கு ஏற்ற ஆடைகளை அணியவும் அறிவுறுத்தியுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்