இலங்கையில் வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

14 ஆடி 2023 வெள்ளி 06:03 | பார்வைகள் : 10595
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று சொட்டுக்கருவி ஊடாக ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக காய்ச்சல் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளர் என தெரிவிக்கப்படுகிறது.
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த சொட்டுக்கருவியில் இருந்து கிருமித் தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சலினால் காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பொருத்தப்பட்டிருந்த சொட்டுக்கருவியில் இருந்து இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.
பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இருதய நோயாளர் என்பதால் வேறு வைத்தியசாலைக்கு மாற்ற வைத்தியர்கள் முயற்சித்தனர்.
எனினும், அங்கு அவர் உயிரிழந்துள்ள நிலையில், சொட்டுக்கருவியில் இருந்து ஏற்பட்ட கிருமித் தொற்று மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1