இலங்கை சென்று மீண்டும் நாடு திரும்பிய பிரான்ஸ் ஜனாதிபதி
29 ஆடி 2023 சனி 03:00 | பார்வைகள் : 5529
பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இலங்கை சென்று மீண்டும் பிரான்ஸ் திரும்பியுள்ளார் என இலங்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதியுடன், அந்நாட்டின் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் அவர் இலங்கைக்கு சென்றுள்ளதுடன், அதிகாலை 1.44 மணியளவில் அவர் மீண்டும் பிரான்ஸ் திரும்பியுள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இருதரப்பு கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.