Paristamil Navigation Paristamil advert login

பர்சிலோனாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது PSG!

பர்சிலோனாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது PSG!

17 சித்திரை 2024 புதன் 07:00 | பார்வைகள் : 2100


முந்தைய கால் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருந்த PSG அணி, நேற்று ஏப்ரல் 16 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் பர்சிலோனாவை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. 

சாம்பியன் லீக் சுற்றுப்போட்டிகள் மிகுந்த பரபரப்புக்கு இடையே இடம்பெற்று வருகிறது. ஸ்பெயினின் Lluís Companys மைதானத்தில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில் 4-1 எனும் கோல் கணக்கில் PSG அணி அபாரமாக வெற்றி பெற்றது. 

போட்டியில் Berça தரப்பில் முதலாவது கோல் Raphinha இனால்  12' ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. 

போட்டி பரபரப்பு கட்டத்தை நெருங்க.. அடுத்தடுத்து PSG தரப்பில் O. Dembélé 40' மற்றும் Vitinha 54' ஆகிய இருவரும் ஆளுக்கொரு கோல்கள் அடித்தனர்.

பின்னர், K. Mbappe 61' (P), 89' ஆகிய நிமிடங்களில் இரட்டைக் கோல்களை விளாசினார். முந்தைய போட்டிகளில் ஜொலிக்க தவறிய எம்பாபே இந்த போட்டிகளில் இரட்டைக் கோல்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அதன்பின்னர் Berça அணியினால் கோல்கள் அடிக்க முடியவில்லை. போட்டி 4-1 எனும் கோல்கணக்குடன் முடிவுக்கு வந்தது. 

அரை இறுதிக்கு முன்னேறியுள்ள PSG, வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி Dortmund அணியுடன் மோத உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்