Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

வித்தியா கொலை வழக்கின் குற்றவாளி உயிரிழப்பு

வித்தியா கொலை வழக்கின் குற்றவாளி  உயிரிழப்பு

1 சித்திரை 2024 திங்கள் 13:37 | பார்வைகள் : 15866


யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

37 வயதான பூபாலசிங்கம் தவக்குமார் என்பவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்