Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அதிர்ச்சி - குடும்பத்தை கொன்று நகை,பணம் கொள்ளை

இலங்கையில் அதிர்ச்சி - குடும்பத்தை கொன்று நகை,பணம் கொள்ளை

19 வைகாசி 2024 ஞாயிறு 07:54 | பார்வைகள் : 1135


மாமா, தம்பி, சகோதரனை கொன்று பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டதாக நல்லா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாலதெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று(19) அதிகாலை நான்கு மணியளவில் இந்த மனிதாபிமானமற்ற கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

மிதிவண்டியில் பயணித்த நபரை சோதனையிட்ட பொலிஸார், அவரிடம் இருந்து சுமார் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்கப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் சந்தேகநபரை கைது செய்து பொலிஸாருக்கு அழைத்துச் சென்றதாகவும், அவரிடம் இருந்த கடிதங்களை பரிசோதித்த போது, ​​கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது மனைவியின் மாமா, புஞ்சி மற்றும் அவர்களது குழந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்