Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில் உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாடு

சுவிட்சர்லாந்தில் உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாடு

11 ஆனி 2024 செவ்வாய் 10:11 | பார்வைகள் : 1284


சுவிட்சர்லாந்தில் உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இந்நிலையில், அதில் பங்கேற்பதற்காக, 90 உலக நாடுகளின் தலைவர்கள் சுவிட்சர்லாந்து வர இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 15 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதிகளில், சுவிட்சர்லாந்தில், உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாடு நடைபெற உள்ளது. 

அந்த மாநாட்டில் பங்கேற்க, 90 உலக நாடுகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்து இருப்பதாக சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதியான Viola Amherd தெரிவித்துள்ளார்.

28 மாதங்களுக்கு முன் ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதால் துவங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.

உக்ரைனின் கோரிக்கையை ஏற்று சுவிட்சர்லாந்து இந்த மாநாட்டை நடத்துவதால், ரஷ்யா அதில் பங்கேற்கப்போவதில்லை. 

ஐரோப்பிய ஒன்றியத்தைப்போலவே சுவிட்சர்லாந்தும் ரஷ்யா மீது தடைகள் விதித்ததால், அந்நாடு நடுநிலைமை நாடு அல்ல என ரஷ்யா கூற, ரஷ்யாவுக்கு அழைப்பும் இல்லை என சுவிட்சர்லாந்து கூறிவிட்டது.

பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா முதலான நாடுகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளன. 

ரஷ்யாவும் உக்ரைனும் மாநாட்டில் பங்கேற்காவிட்டால் தாங்களும் பங்கேற்கமாட்டோம் என பிரேசிலும் சீனாவும் கூறிவிட்டன. 

சில நாடுகள் மாநாட்டில் பங்கேற்கப்போகின்றனவா இல்லையா என்பது குறித்து இதுவரை முடிவு எதையும் தெரிவிக்கவில்லை.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்