Paristamil Navigation Paristamil advert login

யாழில் பால் குடிக்க மறுத்த ஒன்றரை மாத குழந்தையை கொன்ற தாய்

யாழில் பால் குடிக்க மறுத்த ஒன்றரை மாத குழந்தையை கொன்ற தாய்

4 ஆவணி 2024 ஞாயிறு 13:33 | பார்வைகள் : 1404


யாழ்ப்பாணத்தில் குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடித்ததால் , குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் குழந்தையின் தாயார், " குழந்தை பால் குடிக்க மறுப்பதால் , கைகள் கால்களை திருகினேன். ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை" என தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தாயை கைது செய்துள்ளதுடன் குழந்தையின் தந்தையையும் , குழந்தையை பராமரிக்க வீட்டிற்கு வந்து சென்ற பெண்ணொருவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மேலும் , குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் பாரப்படுத்திய பின்னர் , நீதிமன்ற உத்தரவின் பேரில் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்