Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது தாக்குதல்!

பரிஸ் : வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது தாக்குதல்!

5 ஆவணி 2024 திங்கள் 06:45 | பார்வைகள் : 2190


வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவரிடம் இருந்து கைக்கடிகாரம் ஒன்று திருடப்பட்டுள்ளது.

பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 63 வயதுடைய ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி அளவில் Boulevard Raspail பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவரைச் சுற்றி வளைத்த இருவர், அவரை கீழே தள்ளி விழுத்தி தாக்கியுள்ளனர். 

பின்னர் அவர் அணிந்திருந்த, 80,000 யூரோக்கள் மதிப்புள்ள Patek Philippe நிறுவனத்தின் கைக்கடிகாரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்காணிப்பு கமராவின் உதவியோடு கொள்ளையர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்