Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் வீட்டில் ரணகளம்..!

பிக்பாஸ் வீட்டில் ரணகளம்..!

9 ஐப்பசி 2024 புதன் 08:39 | பார்வைகள் : 190


பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய மூன்றாவது நாளில் ரவீந்தரை ரஞ்சித் அடிக்க ஆவேசமாக பாய்ந்த காட்சிகள் ப்ரோமோவில் வெளியானதை அடுத்து பிக் பாஸ் வீட்டில் ஒரு ரணகளம் நடக்கிறது என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களில், இந்த சீசனில் தான் அதிக சண்டை போடுவார்கள் என்ற சாதனை ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது. முதல் நாளே போட்டியாளர்களுக்குள் கருத்து வேறுபாடு மற்றும் சண்டை ஏற்பட்ட நிலையில், இன்று நடந்த ஒரு வாக்குவாதத்தில் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் மோதிக்கொள்கின்றனர்.

ஒரு கட்டத்தில் "கையேடுறா?" என்று ரஞ்சித் சொல்ல, ரவீந்தர் ஆவேசமாகி "என்னடா செய்து விடுவாய்?" என்று கேட்கிறார். இதை அடுத்து ரவீந்தரை அடிப்பதற்காக ரஞ்சித் பாய, சக போட்டியாளர்கள் அவரை கஷ்டப்பட்டு பிடிக்கின்றனர். இந்த களபேரத்தில், சண்டையை தடுக்க வந்த அருண் கீழே விழுந்துவிட்ட நிலையில், அவரை யாருமே கவனித்தது போல் தெரியவில்லை.

ரவீந்தரை ஜாக்குலினும் மற்ற போட்டியாளர்களும் ரஞ்சித்தையும் சமாதானப்படுத்தி வருகின்றனர். இந்த சண்டைக்கு முழுமையான காரணம் என்ன என்பது இன்றைய எபிசோடில் தான் தெரியவரும் என்றாலும், இந்த சண்டை பிக் பாஸ் வீட்டில் ஒரு ரணக்ளத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் இந்த ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்