மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்

12 சித்திரை 2025 சனி 03:51 | பார்வைகள் : 536
மியான்மரில் (வெள்ளிக்கிழமை) காலை 8.02 மணியளவில் 4.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.