EuroMillions : 174 மில்லியன் யூரோக்கள் அதிஷ்ட்டம் காத்திருக்கிறது..!
![EuroMillions : 174 மில்லியன் யூரோக்கள் அதிஷ்ட்டம் காத்திருக்கிறது..!](ptmin/uploads/news/France_rajeevan_20240615_095019.jpg)
15 ஆனி 2024 சனி 07:00 | பார்வைகள் : 2885
செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் வெற்றிபெறுபவருக்கு 174 மில்லியன் யூரோக்கள் எனும் பெரும் தொகை காத்திருக்கிறது.
முன்னதாக ஜூன் 14 ஆம் திகதி இடம்பெற்ற EuroMillions அதிஷ்ட்டலாப சீட்டிழுப்பில் 160 மில்லியன் யூரோக்கள் பணம் வெற்றிபெற முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் எவரும் அந்த தொகையை வெல்லவில்லை. அதையடுத்து, ஜூன் 18 ஆம் திகதி மீண்டும் 174 மில்லியன் யூரோக்களுடன் சீட்டிழுக்கப்பட உள்ளது.
அதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை 109,895 யூரோக்கள் வீதம் பத்துப்பேருக்கு அதிஷ்ட்டலாத்தில் பணம் வெற்றிகொள்ளப்பட்டதாக EuroMillions அறிவித்துள்ளது.