Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தம்....

பிரித்தானியாவில் ஊதிய உயர்வு கோரி  வேலைநிறுத்தம்....

13 ஆவணி 2023 ஞாயிறு 10:32 | பார்வைகள் : 4301


கொரோனா தொற்று, ரஷ்யா - உக்ரைன் போர் போன்ற காரணங்களால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றது.

மேலும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகியதால் பிரித்தானியாவில் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டு பணவீக்கமும் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில் பிரித்தானியாவில் ஊதிய உயர்வு கோரி 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக அங்குள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதாவது எதிர் வரும்  26 ஆம் திகதி (சனிக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி (சனிக்கிழமை) பிரித்தானியாவில் உள்ள சுமார் 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக அங்குள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்