Paristamil Navigation Paristamil advert login

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமண உறவில் விரிசல் ஏற்பட்ட காரணம் என்ன..?

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமண உறவில் விரிசல் ஏற்பட்ட காரணம் என்ன..?

19 ஆடி 2024 வெள்ளி 09:58 | பார்வைகள் : 1178


நடிகர் அபிஷேக் பச்சன் சமூக வலைதளங்களில் விவாகரத்து பதிவை லைக் செய்ததால், ஐஸ்வர்யா ராயிடம் இருந்து விவாகரத்து பெறப் போகிறார் என்று மீண்டும் பேசப்பட்டு வருகிறது. இதற்கான காரணத்தை ரசிகர்கள் தற்போது தேடி வருகின்றனர். அமிதாப் பச்சன் வீட்டு பிரச்சனைக்கு நடிகை ஒருவரே காரணம் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இடையே எல்லாம் நன்றாக இருக்கிறதா? ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் ஐஸ்வர்யா தனது மகளுடன் தனியாக சென்றார். இது பலருக்கும் கேள்வியை எழுப்பிய நிலையில், பின்னர் தனியாக விமான நிலையத்திற்கும் சென்றார். இதைத் தொடர்ந்து அமிதாப் பச்சன் வீட்டில் கருத்து வேறுபாடுகள் அதிகம் என்றும், இதற்கெல்லாம் இந்த நடிகை தான் காரணம் என்றும் நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

ஐஸ்வர்யா, அபிஷேக் மட்டுமின்றி அவரது மாமியார் மற்றும் நாத்தனார் கூடவும் சண்டை வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் அனந்த் அம்பானி திருமண விழாவில் எடுக்கப்பட்ட பச்சன் குடும்ப புகைப்படத்தில் அவர் காணப்படவில்லை. பச்சன் குடும்பம் நுழைந்தவுடன் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் ஒதுங்கியே இருந்தார். திருமண விழாவில் அபிஷேக் உடனான புகைப்படம் வைரலானது. ஆனால் ஐஸ்வர்யா தனது மாமியார் ஜெயா பச்சன் மற்றும் மாமனார் அமிதாப் பச்சனிடமிருந்து வெகு தொலைவில் இருந்தார்.

ஐஸ்வர்யா தனது மாமியார் ஜெயா பச்சனை சந்திக்கவில்லை. ஆனால் பழம்பெரும் நடிகை ரேகாவை சந்தித்து, ஆரத்தழுவிக் கொண்டனர். அது மட்டுமின்றி, ஒருவரையொருவர் காதுகளில் கிசுகிசுத்துக் கொண்டனர். ஐஸ்வர்யாவும் ரேகாவும் ஒன்றாக இருப்பது இது முதல் முறையல்ல. 2019 ஆம் ஆண்டில், உருது கவிஞர் கைஃபி ஆஸ்மியின் 100 வது பிறந்தநாளில், இருவரும் கைகோர்த்து நடந்தனர். இதையெல்லாம் பார்க்கும் போது நடிகை ரேகா தான் பச்சன் வீட்டின் வில்லன் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ரேகாவும் அமிதாப் பச்சனும் முன்னாள் காதலர்கள் என்பது பலருக்கும் தெரியும். ரேகாவுக்கும் ஜெயாவுக்கும் நடக்கும் சண்டை இந்தி திரையுலகில் பலருக்கும் தெரியும். தற்போது நடிகை ரேகாவுடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக இருப்பதே பச்சன் குடும்பத்தினருக்கு இடையேயான சண்டைக்கு காரணம் என கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோக்களுக்கு மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பச்சன் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டைக்கு ரேகா தான் காரணம். பச்சன் குடும்பத்தில் வித்தியாசம் உள்ளது என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ‘எதிரியின் எதிரி என் நண்பன்’ என்ற கருத்தும் பரவி வருகிறது.

சில வருட டேட்டிங்கிற்குப் பிறகு, ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் 20 ஏப்ரல் 2007 அன்று திருமணம் செய்துகொண்டனர். ‘தாய் அக்‌ஷர் பிரேம் கே’ படத்திற்கு பிறகு இருவரும் ‘உம்ராவ் ஜான்’ படத்திலும் நடித்துள்ளனர். இந்த நேரத்தில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. பின்னர் திருமணம் செய்ய முடிவு செய்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்