Paristamil Navigation Paristamil advert login

பிரசவத்தைப் பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்

பிரசவத்தைப் பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9310


 பிரசவத்தில் சிசேரியனை விட சுகப்பிரசவம் தான் சிறந்தது என்று சொல்வார்கள். ஏனெனில் சிசேரியன் பிரசவத்திற்கு பின் எடை அதிகரிப்பதுடன், வயிற்றில் கடுமையான வலி மற்றும் பல நாட்களுக்கு முதுகு வலியை சந்திக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல், தையல் போட்டிருப்பதால், அது ஆறுவதற்கு சில நாட்கள் ஆகும் என்ற காரணத்தினால் தான். 

 
ஆனால் சுகப்பிரசவத்திலும் ஒருசில சிக்கல்களை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா? சுகப்பிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் அவ்வளவு எளிதில் போகாது. இதுவும் யாராலும் மறுக்க முடியாத ஒன்று. பிரசவம் முடிந்த பின்னர் சிரிக்க முடியாது.
 
ஏனெனில் அப்போது வாயை திறந்து பேசினாலே சிறுநீர் வெளியேறும். ஆகவே இதுவும் பிரசவத்திற்கு பின் பெண்கள் சந்திப்பவைகளில் ஒன்று. பொதுவாக மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கானது 4-5 நாட்கள் இருக்கும். 
 
ஆனால் பிரசவத்திற்கு பின், இரத்தப்போக்கு ஆரம்பித்தால், அப்போது அது நிற்பதற்கு பல நாட்கள் ஆகும். இது பெண்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். 
 
சுகப்பிரசவத்தின் போது குழந்தை வெளிவர முயலும் போது, நீங்களும் வயிற்றில் அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்க நேரிடும். அச்சமயத்தில் அதிகப்படியாக மலம் வெளியேறும். ஆகவே அப்போது அதிர்ச்சியடையாமல், நல்ல படியாக குழந்தையைப் பெற்றெடுங்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்